search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதோஷ வழிபாடு
    X

    பிரதோஷ வழிபாடு

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொண்டி

    தொண்டி அருகே அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தின் போது நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தெட்சிணா முர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகநாதர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    Next Story
    ×