என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் மோடி பிரதமராக மக்கள் சூளுரைக்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு
    X

    ராமநாதபுரம் அரண்மனையில் என் மண், என் மக்கள் நடைபயணத்தின் 2-ம் நாள் நிறைவு நிகழ்ச்சியின்போது அண்ணாமலை பேசிய காட்சி. அருகில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    மீண்டும் மோடி பிரதமராக மக்கள் சூளுரைக்க வேண்டும்: அண்ணாமலை பேச்சு

    • ராமநாதபுரத்தில் இருந்து மீண்டும் மோடி பிரதமராக மக்கள் சூளுரைக்க வேண்டும்.
    • இரண்டாம் நாள் நடைபயணத்தில் அண்ணாமலை பேசினார்.

    ராமநாதபுரம்

    பா.ஜ.க.வின் "என் மண், என் மக்கள்" யாத்திரையின் இரண்டாம் நாளாக ராமநா–தபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை–யில் நடைபயணம் தொடங்கி–யது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை யில் நடைபயணம் புறப் பட்டு ராமநாதபுரம் நகரில் கேணிக்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடை பயணம் சென்றது. அப் போது மக்களை சந்தித்து நடைபயணத்தின் நோக் கத்தை அண்ணாமலை மக்க–ளிடம் விளக்கினார்.

    அரண்மனையில் நடை–பயணம் நிறைவடைந்தது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதா–வது:-

    2024-ம் தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்றல்மிகு மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் இந்த யாத் திரைக்கான ஏற்பாடு–களை வெகு சிறப்பாக செய்துள் ளார். என் மண், என் மக்கள் யாத்திரையின் நோக்கம் தமிழகத்தில் 234 தொகுதி–களிலும் நடைபயணம் மேற் கொண்டு மக்களை சந்தித்து தமிழகத்தில் ஊழல் ஆட் சியை விளக்குவதும் 9 ஆண்டு காலம் பாரத பிர–தமர் மோடி மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங் களை எடுத்துக் கூறுவதும் தான்.

    தமிழகத்தில் இன்று மண் மற்றும் மக்களை நேசிக்க கூடிய பிரதமர் தான் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். கடந்த 9 ஆண்டு காலத்தில் பாரத பிரதமர் மோடி தமி–ழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளார். தாய்மொ–ழியாம் தமிழ் சீரும்,சிறப்பு அடைய நம் பிரதமர் பல முயற்சிகளை செய்துள்ளார். திருக்குறளை 100 மொழிக–ளில் மொழிபெயர்க்க கூறி–யுள்ளார்.

    தமிழகத்தில் தி.மு.க. 27 மாதங்கள் ஆட்சி செய்து "என் மண், என் மக்கள்" என்பதை "என் குடும்பம் என் வாரிசு" என வாரிசு அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு அமைச் சர்களின் அலுவல–கங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அமைச்சர் பொன் முடி வீட்டில் கணக்கில் வராத ரூ.41 கோடி பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜியை தமிழக அரசு பாதுகாக்க பாடுபடுகிறது.

    ஊழல் மிகுந்த இந்த நேரத்தில் 2024 தேர்தலில் 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆக பொன்னான வாய்ப்புகளை தாருங்கள். சுவாமி விவேகா–னந்தர் சிகாகோ சென்று விட்டு திரும்பும் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கால் வைப்பேன் என்று மதித்த மண் தான் ராம–நாதபுரம் மண். தேசத் தையும், தேசியத்தையும் மதித்தவர்கள் வாழ்ந்த மண் ராமநாதபுரம் மாவட்டம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நான் வந்ததிலிருந்து என்னை சந்தித்த மக்கள் அனைவரும் பாசத்தோடு அன்போடு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த அன்பர்கள் கேட்டுக் கெண்டது இந்த புண்ணிய பூமியில் பாரத பிரதமர் மோடி போட்டியிட வேண் டும் என்று பலரும் கூறினர்.

    உங்கள் அன்பையும், அன்பு கட்டளையையும் நானும் முன்னாள் அமைச் சர் பொன்னாரும் தலை–மைக்கு கொண்டு சென்று கூறுவது தான் எங்களுடைய தலையாய கடமையாகும். எதிர்க்கட்சிக் கூட்டணி இந்தியா என்று சொல்ல தகுதி வேண்டும். தி.மு.க. 1965-ம் ஆண்டு தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டது. ஊழல் மிகுந்த கட்சி. பிரதமர் மோடி 365 நாட்கள், 24 மணி நேரமும் பிரதமராக இல்லாமல் சாமானிய மனிதராக மக்க–ளுக்காக உழைத்து வருகி–றார்.

    ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் யார் பிரதமர் என்று தெரியவில்லை. திங்கள் கிழமை மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கி–ழமை நிதிஷ்குமார், புதன் கிழமை தாக்கரே, சனி, ஞாயிறு கிழமைகளில் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமராக இருக்கப் போகி–றார்கள். விடுமுறை நாளில் ராகுல் பிரதமராக இருந்து என்ன செய்யப் போகிறார்?

    "என் மண் என் மக்கள்" தமிழகம் முழுவதும் யாத் திரை பயணம் தொடரும். என் மண் என் மக்களை யாரும் சூறையாடக்கூடாது. அதற்கு 2024 தேர்தல் தமிழகத்தில் 39 தொகுதிகளி–லும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும்.அதற்கு ராமநாதபுரம் தொகுதியில் இருந்து முதல் பாராளுமன்ற உறுப்பினரை அனுப்ப வேண்டியது உங்களின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவ–சாய அணி ரவிச்சந்தி–ரன், மாவட்ட பொதுச்செயலா–ளர் மணிமாறன், பா.ஜ.க. கவுன்சிலர் ஜி.குமார், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×