search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
    X

    ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
    • முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தேர்வுக்குழு பரிந்துரைத்த 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    மண்டபம் ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் காளிதாஸ், பரமக்குடி ஆயிரவைஸ்ய மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் மணி முத்து, பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமார், முகுளத்தூர் செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை தமயந்தி, பரமக்குடி கே.ஜே. கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ஜஹாங்கீர் உசேன், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை உமா தேவி, பரமக்குடி ஒன்றியம் பரளை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன், கடலாடி ஊராட்சி ஒன்றியம் சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜோசப்ராஜ், கடலாடி ஊராட்சி ஒன்றியம் எம்.கரிசல்குளம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வீரமாளி, திருப்புல்லாணி ஒன்றியம் ரகுநாதபுரம் கண்ணபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரீத்தா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலாஜி (ராமநாதபுரம்), முருகம்மாள் (மண்டபம்), சாந்தி (பரமக்குடி) ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

    Next Story
    ×