search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வினர் மலர் அஞ்சலி
    X

    சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தி.மு.க.வினர் மலர் அஞ்சலி

    • கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம்முகைதீன், சாயல்குடி விவசாய சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், சாயல்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் விக்னேஷ் ராம் முன்னிலை வகித்தனர்.

    கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், நகர துணைச் செயலாளர் சுப்ரமணியன், ஊராட்சித் தலைவர்கள் டி. வேப்பங்குளம் முருகன், இதம் பாடல் மங்களசாமி, ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, நிர்வாகிகள் சண்முகராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூர் தி.மு.க.

    சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பால்ராஜ், பேரூராட்சி துணைச் சேர்மன்மணிமேகலை பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் குமரையா, ஆபிதா அனிபா அண்ணா, தி.மு.க. அவைத்தலைவர் உதயசூரியன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யது, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×