search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ்   பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
    X

    ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோபால் பேசுகிறார்.

    காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    • காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண் டோ, திருவாடா னை தொகுதி எம்.எல்.ஏ. ராம.கருமாணிக்கம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் மாவீரன் வேலுச்சா மி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மூத்த நிர்வாகிகள் துல்கீப் கான், ஆர்ட் கணேசன், காவனூர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், தட்சிணா மூர்த்தி, மனோகரன், சுப்பிர மணியன், அன்வர் அலி நத்தர், கந்தசாமி, சேது பாண்டியன், கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணி, சுரேஷ் காந்தி, நகர் காங்கிரஸ் தலைவர்கள் கோபி, ராஜீவ் காந்தி, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் காத்த ராஜா, முகமது காசிம் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×