என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
- போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு ஆகியவற்றின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையர் மணிமாறன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத் தார். இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் செயலர் ரமேஷ் மற்றும் தலைவர் சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் மாணவ-மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் சுலைமான் சதாம் முனிய சத்யா, கல்லூரியின் செஞ்சுருள் சங்க அலுவலர் பிரவிந்த் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.






