search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்
    X

    முருகேசன்

    கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்

    • கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த காலங்களில் பள்ளி கல்வித்துறையில் இடைநிலைக்கல்விக்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என கல்வி மாவட்ட அலுவலகங்களும், தொடக்கக்கல்விக்கு ராமநாதபுரம் முழுவதும் ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவல கமும் செயல்பட்டு வந்தன.

    இவைகளை முழுமையாக கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலகம் செயல் பட்டு வந்தது.

    கடந்த ஆட்சியில், தொடக்கக்கல்வித்துறை யில் உள்ள பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்து வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு, மாவட்ட நிர்வாகத் தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடை நிலைக்கல்வி)பள்ளிகள் மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் உள்ள பள்ளி களை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, 2 அலகுகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக கல்வித்துறை பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தது.

    பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளை ஒரே ஆளுகையின்கீழ் கொண்டு வந்ததால் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்வதில் சிரமத்தை எதிர்க்கொண்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. மாணவர்க ளுக்கு வழங்கவேண்டிய அரசு நலத்திட்டங்களில் மிகுந்த தொய்வும் ஏற் பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 200 க்கும் மேற்பட்ட உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரி யர்கள் பணியாற்றி வருகி றார்கள்.

    அனைத்து பள்ளிக ளையும் ஆய்வு செய்ய ராமநாதபுரத்தை மையமாக வைத்து அரசாணை 151 ன்படி ஓரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப் பட்டுள்ளதால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம்

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடை நிலைக்கல்விக்கு பரமக்கு டியை மையமாக வைத்து கூடுதல் மாவட்ட க்கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்பட ஏதுவாக கூடுதல் மாவட்ட கல்வி அலுவ லகத்தை உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×