என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவையில் கொட்டிய மழை: வெள்ளக்காடான வீதிகள்
    X

    புதுவையில் கொட்டிய மழை: வெள்ளக்காடான வீதிகள்

    • சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது.
    • மின் தடையால் பொதுமக்கள் அவதி.

    புதுச்சேரி:

    புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிற்பகலில் சாலையில் நடக்க முடியாத நிலைமை உள்ளது. அனல்காற்றும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாலையில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்வதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. ஆனால் மழை பெய்வதில்லை. சில நாட்கள் லேசான சாரல்மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 6 மணியளவில் திடீ ரென வானிலை மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய்ய தொடங்கியது. நகர பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை சுமார் 2 மணி நேரம் பெய்தது.

    இதனால் நகர பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. எல்லா வீதிகளும் வெள்ளக்காடாக மாறியது.

    இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நகரின் சில முக்கிய சாலைகளில் இருசக்கர வாகன என்ஜின் மூழ்கும் வரை மழைநீர் தேங்கியது.

    தற்காலிக பஸ்நிலையத்திலும் மழைநீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் பஸ்களில் மக்கள் ஏறவும், இறங்கவும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பஸ்நிலையம் சேறும், சகதியுமாக மாறி கிடக்கிறது.

    இரவு 10 மணியளவில் மழை முற்றிலுமாக நின்றது. இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளி யேறியது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிய டைந்தனர்.

    இன்று காலை 6 மணி முதலே வழக்கம்போல கடுமையான வெயில் அடித்து. இரவில் கன மழையும், பகலில் கடும் வெயில் என நூதன வானிலையால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகி யுள்ளனர். * * * புதுவை புஸ்சி வீதியில் தேங்கிய மழை வெள்ளம்.

    Next Story
    ×