search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
    • தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் கோவை கோட்ட கிளை செயலாளர் ஜோன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து கோட்ட கிளை செயலாளர் ஜோன் கூறும்போது, ரெயில்வே பணிமனையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பணிமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வலியுறுத்தியுளளோம். இது சம்பந்தமாக ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×