search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
    X

    பாளையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் ஒரு மாணவிக்கு கேக் வழங்கிய காட்சி. அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

    • நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பாளை காமராஜ் நகரில் அமைந்துள்ள உதவும் கரங்கள், வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோ பால், பாளை. வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோ ரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    சிறப்பு பூஜை

    தொடர்ந்து, மகாராஜா நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிய நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து, நாங்குநேரி பெரும்பத்து விலக்கு பகுதியிலும் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்து, அங்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து, பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பிராயார் கோவிலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில செயலாளர் ஜோதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோபால், சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, கக்கன், மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம், நாங்குநேரி, களக்காடு, பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், சங்கரபாண்டி, அலெக்ஸ், காளப்பெருமாள், வாகை துரை, ராமஜெயம், வட்டார பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, காங்கிரஸ் நகரத் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், முத்துகிருஷ்ணன், ரீமாபைசல், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல், முன்னாள் நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ், ஏர்வாடி நகர செயலாளர் ஆபிரகாம், நாங்குநேரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சித்திரைவேல், பிலியன்ஸ், வின்சென்ட், அன்வர், வெள்ளைசாமி, ஆனந்தராஜன், ராமநாதன், முத்துராமலிங்கம், ஜெயசீலன், இளங்கோ, தங்கம், சதாசிவம், அருண், லட்சுமண், ராஜன், சுயம்பு, கவுன்சிலர் வனிதா காமராஜ், மீகா, மரியசாந்தி, மகளிர் அணி தலைவிகள் வசந்தா லதா, பாலம்மாள், ஸ்ரீதேவி, பிரியா, விமலா, தங்கலெட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×