search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியரை விக்ன ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    கும்பாபிஷேக விழாவில் தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    புளியரை விக்ன ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

    • முன்னதாக கடந்த 5-ந்தேதி விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், பூர்ணா குதி தீபாராதனையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுகா புளியரை தெற்கு தெருவில் வீற்றிருக்கும் விக்ன ராஜ விநாயகர் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 5-ந்தேதி விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், பூர்ணா குதி தீபாராதனையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாகபூஜை நடைபெற்றது.

    நேற்று நான்காம் கால யாக பூஜையுடன், தொடங்கிய விழா அதிகாலை 4 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 4.20 மணிக்கு விமானம் கும்பாபிஷேகமும், 6.45 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மகா அபிஷேமும், 9.30 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×