என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை
    X

    மேட்டுப்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை

    • மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் தூக்கில் தொங்கினார்
    • திருமணமான 5 மாதங்களிலேயே பரிதாபம்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் கூடுதுறைமலையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது48). டெய்லர். இவரது மகன் சூர்ய பிரகாஷ்(30).

    இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நாகவேணி என்பவரை காதலித்து திரு மணம் செய்து ெகாண்டார்.

    திருமணத்திற்கு பின்னர் சூர்யபிரகாஷ் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒன்றாக வசித்து வந்தார். சூர்யபிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகவேணி ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை பிரிந்து, பெங்களூருவில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.மனைவி பிரிந்து சென்றாலும், சூர்யபிரகாஷ் போன் செய்து அவருடன் பேசி வந்ததாக தெரிகிறது.

    கடந்த 9-ந் தேதி தனது மனைவிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். நேற்று வாழ்க்கையில் விரக்தியடைந்த சூர்யபிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் சூர்யபிரகாஷின் அறை பூட்டியே கிடந்ததால், அவரது தாய் தனலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தார். அப்போது அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான அவர் கதறி அழுதார்.அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து விட்டு மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×