என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீனிவயலை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 60). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சீனிவயலில் இருந்து திருச்சி புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ரெங்கராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்புலன்சு ஊழியர் கண்ணன் என்பவரும் லேசான காயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரான சேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எலுமிச்சம் பழம் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வல்லத்திராகோட்டை, வம்பன், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  தனி இடங்க ளிலும், தென்ன தோப்புகளில் ஊடுபயிராகவும் சுமார் 1000 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.

    இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சம்பழங்கள் கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மண்டிகள் மலம் கொள்முதல் செய்யப்பட்டு  பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ பழம் சுமார் ரூ.20வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் சுமார் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது,

    குளிர்பானம், ஊறுகாய் தயாரிக்கவும், சோப்பு உள்ளிட் டவற்றுக்கு  தேவையான பவுடர் தயாரிக்கவும் எலுமிச்சம் பழங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கரில் சுமார் 500 கிலோ அளவுக்கு எலுமிச்சம் பழம் விளைகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், அம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியுள்ளதாலும் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கிலோ சுமார் ரூ.20க்கு கொள் முதல் செய்யப்பட்ட நிலையில்  தற்போது ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார். 
    மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள்” 

    மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு 22 மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க ரூ.101.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

    விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டும் எந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

    வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், 

    நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாயக் குழுக்கள் தங்களுக்கு எந்த வகை எந்திரங்கள் எவ்வளவு எண்கள் 

    தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி, மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. 

    மானிய விலையில் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை  மற்றும் அறந்தாங்கி அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், 

    வேளாண்மை பொறியியல் துறை,  புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர்       கவிதா ராமு வழங்கினார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:


    மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென ‘குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தெரிவு செய்து, போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.

    குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்புப் பரிசாக ரூ.5,000 மும்,  ஊக்கப் பரிசாக       ரூ.1,000 மும் மற்றும் அனைத்து மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது என்றார்.

    பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து ஆலங்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய ெ சயலர் சொர்ணக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 

    பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயர்வைக்கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். மார்க்சிஸ்ட் வெனினிஸ்ட் ஒன்றிய செயலர் பாஸ்கரன், 

    இந்திய கம்யூனிஸ்ட் கறம்பக்குடி ஒன்றிய செயலர் ஜேசுராஸ்,  ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்மாறன் முருகன் மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் நகர செயலா ளர் முத்துக்கருப்பன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பவானந்தம்  ஜெயரா ஜ்  ராதா மணிமேகலை ஆறுமுகம் உள்ளிட்ட 20-க்கும் அதிகமானோர் பங் கேற்றனர்.

    ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி ஊராட்சியில் அரசு திட்டத்தில் வீடு கட்டப்படாமலே சிலருக்கு  நிதி விடுவிப்பு செய்துள்ளனராம். 

    மேலும் தேசிய ஊரக வேலை  உறுதித்திட்டத்தின் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளதாம். இதை கண்டித்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் குமாரவேல் தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, 

    அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருணா, ஒன்றிய தலைவர் விமல்துரை, கீரமங்கலம் பேரூராட்சி உறுப்பினர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர்,

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்.

    கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது.

    அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 172 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது :

    நகரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் கனவுத் திட்டமாக உள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞசப்பை இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் தமிழகம் தூய்மையான பசுமையான, விலங்கினங்கள் வாழத் தகுதியான மாநிலமாக மாற்றப்படும்.

    தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் துறை சர்பில் ஆயிரத்து 180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த 172 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தீன் பைகள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் தேங்கும் 143 கிடங்குகள் கண்டறியப்பட்டு ஓராண்டில் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும். வரும் காலங்களில் குப்பைகள் எங்கு சேகரிக்கப்படுகிறதோ அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்ககூடிய திட்டம் தொடங்கப்படும்.

    ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள்ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் நிறைவுபெறும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
    விவசாயிடம் பணத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் பணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயி. இவர் பரம்பூரில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்தும், தனது வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் தான் எடுத்த பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு வெளிேய வந்தார். 

    பின்னர் பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை காணவில்லை. இதையடுத்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தும் பையை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் மர்ம நபர்கள் இருவர் அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது. 

    வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட அந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றிருக்கலாம் என தெரிய வந்தது. இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் கேமராவில் பதிவான காட்சிகளுடன் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு உத்தரவின் பேரில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தியதில் விவசாயியிடம் பணத்தை திருடி சென்றவர்கள் இருவரும் திருச்சி திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபி (45) என்பவரை போலீசார் கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

    இந்த நிலையில் நேற்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாவது குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த முத்து (45) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 1.50  லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது

    விஷம் சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 70). இவர்  சம்பவத்தன்று தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்தி ருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். 

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ராஜாமணி உயிரிழந்தார். 

    இச்சம்பவம் குறித்து  குறித்து கீரமங் கலம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  குமார் மகன் உதயவேந்தன் (வயது 16), இவர் அப்பகுதியில் உள்ள  அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

    இவர் அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல்  கலை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உதயவேந்தனை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உதயவேந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து வந்த தகவலின்பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புனித அடைக்கல மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வேங்கிட குளத்தில் புனித அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர்பவனி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினந்தோறும் புனித அடைக்கல மாதா திருஉருவ கொடியேற்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது. நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. வேங்கிடகுளம் அருட்திரு பங்குத்தந்தை பபியான் தைமையில் அருட்தந்தையர்கள் திருவிழா ஆடம்பர திருப்பலி பூஜையை சிறப்பான நடத்தினர்.  

    இதையடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல மாதா ஆலய கோவில் 4 தேர் பவனி நடைபெற்றது. இதையடுத்து தேரினை நான்கு வீதிகள் வழியாக பொதுமக்கள் இழுத்து வந்தனர்.

    இதில் வேங்கிட குளம், பாத்தம்பட்டி, மரவள்ளிக்காடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×