search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை: பணி சுமை காரணமா? போலீசார் விசாரணை
    X

    பொதுப்பணித்துறை என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை: பணி சுமை காரணமா? போலீசார் விசாரணை

    • சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராஜகாடு முதல் வீதியை சேர்ந்தவர் அங்குராஜ் (53). கோவையில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அங்குராஜ் கடந்த சில நாட்கள் முன்புதான் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. திலகவதியும், 2 மகள்களும் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தனர். அங்குராஜ் மட்டும் ராஜாகாடு பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மது அருந்த சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் திலகதிக்கு தகவல் தெரிவித்தனர். திலகவதி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவு உடைத்து உள்ளே சென்றபோது தங்கராஜ் தூக்குபோட்டு அழுகிய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×