search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு-முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்
    X

    வெற்றிபெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை பரிசு வழங்கியபோது எடுத்தபடம்.

    ஆலங்குளம் அருகே கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு-முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்

    • கபடி போட்டியில் 58 கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.
    • 6-ம் பரிசு மலையராமபுரம் அணியினருக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே தெற்கு காவலா குறிச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆலடிஅருணா அறக்கட்டளை மற்றும் ஆர்.கே.சி கபடி கிளப் இணைந்து நடத்திய கபடி போட்டி நடந்தது. இதில் 58 கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். முன்னாள் அமைச்சர் பூங்கோதை தலைமை தாங்கினார்.

    வெற்றி பெற்ற அணிகளில் முதல் பரிசு ஆர்.கே.சி. அணியினருக்கும், 2-ம் பரிசு வடமலைப்பட்டி அணியினருக்கும், 3-ம் பரிசு ரோலக்ஸ் அணியினருக்கும், 4-ம் பரிசு புளியங்குடி அணியினருக்கும், 5-ம் பரிசு கொடிய குறிச்சி அணியினருக்கும், 6-ம் பரிசு மலையராமபுரம் அணியினருக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாஞ்சோலை துரை, கிளைச்செயலாளர் மகேந்திரன், தி.மு.க. பிரமுகர்கள் ஹரிஹரன், முருகையா பாண்டியன், அந்தோணி, சுப்பையா பாண்டியன், துரைராஜ், வடிவேல் முருகன், சேக்கப்பாண்டியன், மகேஷ் பாண்டியன், இசக்கி வேல், தங்கராஜன், செல்லதுரை, மாரிதுரை, காளைச்சாமி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சரவணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×