search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்
    X

    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் சண்.ராமநாதன் பரிசு வழங்கினார்.

    கேரம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்

    • போட்டியானது 3 பிரிவுகளாக நடைபெற்றது.
    • இதில் 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது.

    இதில் தஞ்சை,சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 24 மாவட்ட ங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 192 பேர், ஆண்கள் இரட்டையர் பிரிவில் 73 பேர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 50 பேர் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது.

    நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப் போட்டி யில் இறுதி ஆட்டம் நடை பெற்றது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அசோக்குமார், டில்லி பாபு அணியினர் முதல் இடத்தை பிடித்தனர்.

    அதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை சேர்ந்த டில்லி பாபு முதலிடத்தையும் சென்னையை சேர்ந்த அருள் கார்த்தி 2-ம் இடத்தையும் பிடித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மதுரையை சேர்ந்த மித்ரா முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த பரக்கத் நிஷா 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசு தொகையை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கேரம் கழக துணை தலைவர் ராஜகோபால், செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் விக்னேஷ், நிர்மல்குமார், ரெத்தினவேல் மற்றும் பலர் செய்திருந்தனர்

    Next Story
    ×