search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    கோவையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

    • கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • இதில் தனியார் துறை நிறுவனங்கள் நேர்காணல்கள் நடத்தி தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய உள்ளனர்.

    கோவை:

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் 12-ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் நாளை மறுநாள் (12-ந் தேதி) நடக்கிறது.

    கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் தனியார் துறை நிறுவனங்கள் நேர்காணல்கள் நடத்தி தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேல் 40 வயதிற்கு உள்ளான 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    தங்களின் விவரங்களை 8925513701, 8925513717, 8925801463, 9080750139 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×