என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
- மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வேதனை
- கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சாவு
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள எம்.எல்.ஏ., வீதியை சேர்ந்தவர் மகேஷ்கு மார். இவர் கண்ணம்பா ளையம் பஞ்சாயத்தில் உதவி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுருதிகா (வயது 19).
இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது அவரது பெற்றோர் மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சுருதிகா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி க்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுருதிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்