search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி ஒப்புதல்
    X

    சென்னை ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி ஒப்புதல்

    • 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர்.
    • 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் கோர்ட்டு முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.

    இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.

    இந்த பரிந்துரையை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். பின்னர், இந்த 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர். இந்த ஆவணம், மத்திய அரசு மூலமாக ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×