என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை, ரெட்டியார்பட்டியில் நாளை மறுநாள் மின்தடை
- ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- கொங்கந்தான் பாறை,இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான கழகத்தின் நகர்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் ரெட்டியார் பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல் பாளை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வி.எம். சத்திரம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரிய குளம், மேலகுளம், நடுவக் குறிச்சி, ரஹ்மத் நகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி,
திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், படப்பக்குறிச்சி, மணப்படை வீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜா நகர், தியாகராஜ நகர், அன்பு நகர், முருகன் குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






