search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே பெண் திடீர் சாவு  போலீஸ் விசாரணை
    X

    நெல்லிக்குப்பம் அருகே பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை

    • கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எழு மேடு அகரத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவரது வீட்டிற்கு உறவினர்கள் சின்னதுரை மற்றும் அங்காளம்மாள் வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று அங்காளம்மளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது கணவர் சின்னதுரை தங்கள் உறவினர்களிடம் மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார். ஆனால் அங்காளம்மாள் திடீரென்று உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த அங்காளம்மாள் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×