search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த போட்டோகிராபர் கைது
    X

    கோவையில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த போட்டோகிராபர் கைது

    • நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், செல்போன், கல்லூரி சான்றிதழ் எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.
    • முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கல்லூரி படித்து முடித்து உள்ளேன். நான் எனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது தியாகி குமரன் வீதியை ேசர்ந்த போட்டோகிராபர் குலாம் தஸ்தகீர்(35) என்னை பார்த்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எனது தந்தையை அடிக்கடி தொடர்பு கொண்டு என்னை பெண் கேட்டார்.

    அப்போது எங்களுக்கு இடைேய பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு எனது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ஸ்மாட் வாட்ச், செல்போன், கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.

    நாங்கள் பெங்களூரில் உள்ள எனது காதலனின் சகோதரி வீட்டிற்கு சென்றோம். பின்னர் ஆந்திர மாநிலம் விகோடாவுக்கு சென்று 4 பேர் முன்னிலையில் திருமணம் செய்தோம். இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள எனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தோம்.

    அப்போது தான் தெரிந்தது எனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது தெரிய வந்தது. முதல் திருமணத்தை மறைத்து ஏன் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கேட்டதால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்னை எனது கணவர் அடித்து உதைத்து கொடுமைபடுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×