search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

    கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

    • வேலாயுதபுர கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.
    • அதில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 6மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் முறையாக வழங்கிடகோரி மனு அளித்தனர். அப்போது ஊராட்சித் தலைவர், யூனியன் தலைவர் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய ஆணையாளரிடமும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

    மேலும் கடந்த மாதம் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது சாத்தான்குளம் போலீசார் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில் 6மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் அவதி அடைந்துள்ளோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    Next Story
    ×