என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
    X

    தேங்கிய மழைநீரில் சிரமத்துடன் நடந்து செல்லும் பொதுமக்கள்.

    சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

    • இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை முழுவதுமாக அமைத்தி டாமலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை யின் உயரத்தை விட புதிய சாலை உயரமாக இருப்பதா லும்,வடிகால் வசதி இல்லாத காரணத்தாலும் தற்போது அப்பகுதியில் பெய்த மழை நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது,

    மனு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத்தி ற்க்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்களும், பள்ளி செல்லும் குழந்தை களும் அந்த குளம்போல் காட்சி தரும் மழை நீரில் தான் கடந்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது.

    இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    எனவே உடனடியாக மழை நீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×