search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்
    X

    சூலூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல்

    • 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்
    • சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

    சூலூர்,

    கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் மசநாயக்கன் கோவில் பகுதி உள்ளது.

    இந்த பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள்செல்வதே சிரமமாக இருந்து வந்தது. இந்த சாலையை சீர் செய்ய கோரி பொதுமக்கள் பல முறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு, இந்த சாலையானது சுத்தமாக சேதமாகி விட்டது. இதனால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்.

    பின்னர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார் , பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வராஜ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    விரைவில் சாலை செப்பனிடப்படும் என பட்டணம் ஊராட்சி தலைவர் கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×