search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணவாடி பரிசல் துறைகாவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
    X

    பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மாயமான ராஜாவை தேடும் தீயணைப்பு படை வீரர்கள்.

    பண்ணவாடி பரிசல் துறைகாவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு

    • கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வ தற்காக, ஈரோடு பழையபா ளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற வெல்டிங் தொழிலாளி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று திருவிழா முடிந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு சென்ற அவர், காவிரி ஆற்றில் தனது நண்பர்க ளுடன் நீராடினார். மற்ற வர்கள் கரைக்கு வந்த நிலையில், ராஜா நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவருடைய நண்பர்கள், மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரில் மூழ்கி ராஜாவை தேடினர்.

    இரவு வெகு நேரத்துக்கு பின்னர் ராஜா பிணமாக மீட்கப்பட்டார். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ராஜாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஜனனி என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். தந்தை நீரில் மூழ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவர்கள் கதறி துடித்தனர். 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தந்தை பலியான சம்பவம் அவர்களது உறவினர்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×