search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
    X

    புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

    • சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 4 வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்று முடிந்தது.

    தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையடுத்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னி லையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கலந்து கோவிலை வந்தடைந்தனர்.

    இதில் புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா, காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி. நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×