என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு யாகம் நடந்த ேபாது எடுத்த படம்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு பஞ்சமி வழிபாடு
- நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பழமை வாய்ந்த செல்லி யம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, வராஹி அம்மன் சிற ப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமு பூசாரி செய்திருந்தார்.
Next Story






