search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டையில், 12-ந் தேதி ஓவியப்போட்டி
    X

    பட்டுக்கோட்டையில், 12-ந் தேதி ஓவியப்போட்டி

    • போட்டியானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • போட்டியன்று படம் வரைவதற்கு பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் ஓவியப் போட்டி வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

    போட்டிகள் பட்டுக்கோட்டை பண்ணை வயல் சாலையில் உள்ள பான் செக்கர்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற உள்ளது.

    ஓவியப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

    இதில் எல்கேஜி முதல் யு.கே.ஜி வரை மரம் நடுதல் என்ற தலைப்பிலும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நீர்நிலைகள் மேம்படுத்துதல் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தெடுத்தல் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள், நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்த போட்டிகளை பொறுத்தவரை பென்சில், கிரேயான்ஸ், ஆயில் பேஸ்டல், வாட்டர் கலர், போஸ்டர் கலர், அக்ரிலிக் கலர் வண்ணங்களில் மட்டும் வரையலாம்.

    போட்டியன்று படம் வரையும் பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    மற்ற அனைத்து உபகரணங்களும் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு குரூப்பிற்கும் முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும்.

    கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    முன்பதிவு செய்ய இன்று 9-ம் தேதி கடைசிநாள்.

    இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டுக்கோட்டை மயில்பாளையம் எல்.ஐ.சி.ஆபீஸ் எதிரில் சிவம் ஓவிய வகுப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×