என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பகுதியில் சரக்கு லாரி மோதி பெயிண்டர் பலி
    X

    சூலூர் பகுதியில் சரக்கு லாரி மோதி பெயிண்டர் பலி

    • லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
    • பொதுமக்கள் டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே காரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). பெயிண்டர். இவருக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரி பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அவர்கள் கும்பலாக திரண்டு வந்து அந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், டிரைவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்யாம்குமார் என்பதும், தெலுங்கானாவை சேர்ந்த சரக்கு லாரியில் டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×