search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே  மது போதையில் பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பலி
    X

    தென்காசி அருகே மது போதையில் பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பலி

    • தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர்.
    • சித்திரைகுமார் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் திரவியநகர் கிராமத்தில் உள்ள சம்பன்குளத்தில் இறந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் சடலம் மிதப்பதாக பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர். பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சின்னபள்ளிவாசல் தெருவை சேர்ந்த சித்திரைகுமார் (வயது 48) என்பதும், அவர் திரவியநகர் பகுதியில் தங்கியிருந்து கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என்றும், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவந்தது. மது போதையில் தான் அவர் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×