search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் அருள்பாலிப்பு.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தியாகராஜாருக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம்.
    • பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா இன்று நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிசேகம் நடந்தது.

    அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர்.

    பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×