search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சாபாளையம் புலிவீரய்யன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பச்சாபாளையம் புலிவீரய்யன் கோவில் கும்பாபிஷேக விழா

    • விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பேரூர்,

    பேரூர் அருகே பச்சாபாளையத்தில், புலிவீரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, மார்ச் 1-ந் தேதி நிலமகள் வழிபாடு, முதல் நிலை வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து மாலை, முதல் கால வழிபாடும், மார்ச் 2-ந் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு 2ம் கால வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து, மாலை 3ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 4-ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேல், விநாயகர், குப்புலட்சுமி தாயார், புலிவீரய்யன் ஆகிய கோவில் விமான கலசங்களுக்கும், தெய்வ த்திரு மேனிகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை, ஓதுவா மூர்த்திகள் ஜெயபிரகாச நாராயணன், பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்க ப்பட்டது.இதில், திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் நாகராஜ், செயலாளர் தனபால், பொருளாளர் வேலுச்சாமி, திருப்பணி குழுத்தலைவர் போலீஸ் வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் குப்புசாமி, கோபால், நாகராஜ் உள்பட ஊமத்தகுல ஆண் மக்களும், பெண் மக்களும் செய்திருந்தனர்.

    Next Story
    ×