search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூளைச்சாவு அடைந்த நாகை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    மூளைச்சாவு அடைந்த நாகை வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

    • வாலிபரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்தனர்.
    • 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு 25 நபர்கள் வாழ்க்கையில் நலம் பெற்று இருக்கிறார்கள் என்றார்.

    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் மாங்கோட்டை பகுதியை சேர்ந்த 29 வயது நபர் சாலை விபத்து ஏற்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் அந்த வாலிபரின் உறவினர்களிடம் தெரியப்படுத்தினர். இதையடுத்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது என அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து வாலிபரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்தனர். இதயம் மற்றும் நுரையீரரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் திருச்சி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கும் மற்றும் தோல் மதுரை ஆஸ்பத்திரிக்கும், தமிழ்நாடு உறுப்பு மற்றும் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தானமாக வழங்கப்பட்டது. இந்த உறுப்பு தானம் மூலம் 6 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறுகையில், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மூளைச்சாவது அடைந்து உறுப்பு தானம் நிகழ்த்தப்படுவது இது 5-வது முறையாகும். இதுவரை ஆஸ்பத்திரியில் 8 நோயாளிகளுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து மொத்தம் 25 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு 25 நபர்கள் வாழ்க்கையில் நலம் பெற்று இருக்கிறார்கள் என்றார்.

    இந்த உறுப்புதான அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு நிபுணர்களான ரத்தநாள அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மருதுதுரை, மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் சாந்தி பால்ராஜ், சிறுநீரக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார், மயக்கவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் லியோ, சிறுநீரக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சந்திரசேகர், சிறுநீரக அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் டாக்டர் அசோக் ஆகியோரை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் பாராட்டினார்.

    Next Story
    ×