search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு-தாசில்தாரிடம் பா.ஜனதா சார்பில் மனு
    X

    சிவகிரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு-தாசில்தாரிடம் பா.ஜனதா சார்பில் மனு

    • ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.
    • டாஸ்மாக் கடை திறந்தால் மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடு மாறு வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம் ராயகிரி பா.ஜனதா கட்சி சார்பாக வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் தலைமையில், சிவகிரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் தங்கம், வர்த்தக அணி ஒன்றிய தலைவர் முருகேசன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் மெக்கன்பெருமாள், விவசாய அணி மாவட்ட பொறுப்பாளர் ராகவன், பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் வன்னியராஜா, ராயகிரி நகர தலைவர் கணேசன், அமைப்புசாரா நலவாரிய ஒன்றிய தலைவர் சபரிமலை, மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.சிவகிரி தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:-

    சிவகிரி அருகே ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இந்த பகுதிகளில் சிறந்த கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் இடையூறாக இருப்பதோடு மக்களின் அமைதியான வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் ராயகிரியில் டாஸ்மாக் கடை திறக்கும் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தையும் வாசுதேவநல்லூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×