search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு: கலெக்டர் மோகன் அறிவிப்பு
    X

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு: கலெக்டர் மோகன் அறிவிப்பு

    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.
    • முதலமைச்சரால் ஒங்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டகலெக்டர் மோகன் வேளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒங்வொருஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

    இந்த விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல்வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமைசேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்துபணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

    சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள்.

    தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்(https://awards.tn.gov.in/) இணையதளவழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும்வி ண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×