என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
- நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
- 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
பண்ருட்டி வட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த வர்கள் புருஷோத்தமன் (வயது 26). இவருடன் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள், விஜயராஜ் ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டார் சைக்கிளில் (டிரிப்ல்ஸ்) திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூருக்கு சென்றனர். விசேஷம் முடித்து நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது அரசூர் பண்ருட்டி சாலையில் டி.குமாரமங்கலம் அருகே வரும் போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
அந்த வழியாக செல்பவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புருஷோத்தமன் இறந்து விட்டார். பெருமாள், விஜயராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வ க்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்