search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

    • அ.தி.மு.க பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அ.தி.மு.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிர மணியன், முத்துக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, கவுன்சிலர் சந்திரசேகர், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, எஸ்கேஎம். சிவகுமார், விஜய நாராயணம் முத்துக்குட்டி, தருவை காமராஜ், ஆவின் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி மற்றும் நிர்வாகிகள் பால் கண்ணன், சீனி முகமது சேட், பாறையடி மணி, புஷ்பராஜ் ஜெய்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×