search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று பிறந்தநாளையொட்டி நெல்லையில், அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

    • நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., மேயர் சரவணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா ரவி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், கிரிஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள் மணி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கவுன்சிலர்கள் உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், இந்திரா மணி, கந்தன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி உள்பட கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் தலைமையில் துணை மேயர் ராஜு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேயர் சரவணன், மண்டல சேர்மன் மகேஷ்வரி, கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கந்தன், கோகுலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மேயர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×