என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் முதியவர் சாவு: வேன் டிரைவருக்கு 2 வருட சிறை தண்டனை-நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
- அருணாச்சலம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் முத்து செல்வத்துக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேல செவல் செட்டியார் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பா ராத விதமாக அருணாச்சலம் மீது மோதி யதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து செல்வம் (36) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் நடைபெ ற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட ஜே.எம். 5-வது நீதிபதி முரளிதரன் அளித்த தீர்ப்பில் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் முத்து செல்வத்துக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்