என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே மொபட் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி
- தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
- பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 73).
இவரது மனைவி ஜோதிலட்சுமி (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பழனிவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






