search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    • மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 59).

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    தஞ்சை மூலிகைப் பண்ணை ரோட்டில் வந்த போது சாலை யில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    இதில் கட்டு ப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×