search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    • வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (28). இவர் தனது மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை ராமலிங்கம் (59). இவரது மனைவி இருவரும் கோபி சாய் அபிராமி நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இருவருக்கு மிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ராமலிங்கத்தின் மனைவி கோபத்தில் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ராமலிங்கம் மன வேதனை யில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் தனது தந்தையை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×