search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு
    X

    புதுமை இரவு வழிபாடு நடந்தது.

    பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்று பூண்டி மாதா பேராலயம்.

    பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் நாட்டு மக்கள் நலம் பெறவும் நாடு வளம் பெறவும் வேண்டி புதுமை இரவு குணமளிக்கும் நற்செய்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசடி பட்டி பங்குத்தந்தை அமல வில்லியம் ஒருங்கிணைத்து நிறைவேற்றினார்.

    பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்கு பின்னர் பூண்டி மாதா சுருபவம் வைக்கப்பட்ட சிறிய தேர் பவனி நடைபெற்றது. அப்போது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபட்டனர்.

    அதன் பின்னர் குணமளிக்கும் இரவு ஜெப வழிபாடு நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×