search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 24 மையங்களில் இன்று நீட் தேர்வு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 24 மையங்களில் இன்று நீட் தேர்வு

    • அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர்.

    சேலம்:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை தேர்வு நடை பெற்றது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் 10,400 மாணவர்கள் நீட் தேர்வை உற்சாகமாக எழு தினர். இதற்கான சேலம் மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், கெங்க வல்லி, கொளத்தூர், சங்க கிரி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் நீட் தேர்வை எழுதினர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5000 பேர் தேர்வு எழுதினர். மாணவ, மாணவிகள், ஹால்டிக்கெட்டில் உள்ள படி குறிப்பட்ட நேரத்தில் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற்றது.

    Next Story
    ×