search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்
    X

    விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

    • விருத்தாசலம் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணை காணவில்லை.
    • இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாவடிகுப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கீர்த்தனா(வயது19). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி மாலை தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கீர்த்தனா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை, அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் அவரை காணவில்லை. இதுகுறித்து கீர்த்தனாவின் தந்தை சுப்பிரமணி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன கீர்த்தனாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×