என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டு விற்றவர் கைது
- விழுப்புரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த ஒரு ஆண்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1- ம் நம்பர் மற்றும் 2- ம் நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மறை முகமாக சிறுசிறு டீக்கடை களில் ஓரமாக பைகளை வைத்துக்கொண்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது ஆங்காங்கே நடை பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீ நாதாவிற்கு வந்த தகவலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையி–லான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரகண்ட நல்லூர் கடைவீதி–யில் டீ கடை ஓரமாக சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த னர். அதில் அவர் அரகண்ட–நல்லூர் வள்ளலார் தெருவை சேர்ந்த கலை–யழகன் (வயது 58) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து கலை அழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு–தல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோர் மீது கடுமை–யான நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ள–னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்