search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் சாவு
    X

    மணிகண்டன்

    தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் சாவு

    • தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் மரணம் அடைந்தார்.
    • ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (வயது 17), 10- ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான குமார் மகன் சந்தோஷ் (17), சங்கர் மகன் கார்த்திக் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர்

    கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து வந்தனர். இந்நிலையில் கலைநல்லூர் அருகே சென்றபோது தனக்கு முன்னால் சென்ற காரை மணிகண்டன் முந்திச் செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் காரின் மீது மோதியதில் கீழே விழுந்ததாகவும் அப்போது எதிர்திசையில் வந்த மினி பேருந்து இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன் இறந்து போனார். சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இதுகுறித்து மணிகண்டன் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்காள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×