search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  செல்போனில் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை முயற்சி
    X

    கடலூர் அருகே செல்போனில் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை முயற்சி

    • கடலூர் அருகே செல்போனில் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    • கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர். கோட்டையம்மாள் (வயது 32). இந்த நிலையில் கணவர் ராமராஜனுக்கும், கோட்டை யம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கோட்டையம்மாள் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரண்டு செல்போன் நம்பரில் இருந்து கோட்டையம்மாளுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அசிங்கமாக பேசி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து கோட்டையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×