என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை
- நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரிய கண்ணாடி சேர்ந்தவர் குமார் (வயது 47).கூலி தொழிலாளி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 8 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி 5 மாதம் 2400 ரூபாய் வீதம் தவணை முறையில் செல்போன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் குமார் ஒரு மாதம் தவணை மட்டும் கட்டியுள்ளார். மீதமுள்ள தவணைப்பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 5-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் குமார் இறப்பதற்கு முன்பு என் சாவுக்கு தனியார் நிதி நிறுவனம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து குமார் உடலை குறிஞ்சிப்பாடி போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி பணம் கட்டாத பெண்ணை மிரட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தனியார் நிறுவன நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தவணைப்பணம் கட்டாத கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்